உலர்ந்த
எலும்புகள்
உயிரடைந்திடுமா
உலர்ந்த எலும்புகள் உயிரடைந்திடுமா
உணர்வற்ற என்ஜனம் மனம்திரும்புமா
ஒருசேனையாய் காலூன்றுமா
ஒருமனதோடு என்னை சேவிக்குமா
ஆவியை அனுப்புங்கப்பா
அசைவு உண்டாகுமே
பெரும் இரச்சலை அனுப்புங்கப்பா
எழுப்புதல் உண்டாகுமே
மாடு தன் எஜமானனை அறியும்
கழுதை தன் முன்னணையை அறியும்
உம்ஜனம் எங்களுக்கோ
உணர்வும் அறிவும் இல்லையே - ஆவியை
நாரை தன் வேளைதனை அறியும்
காட்டுப்புறா தன் காலம் அறியும்
உம்சாயலின் சிருஷ்டிகளோ
வருகையின் நேரத்தை அறியலையே - ஆவியை